பாதி வழியில் பழுதாகி நின்ற சரக்கு ரயில் : கடும் போக்குவரத்து நெரிசல்-பயணிகள் அவதி

காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் நாகை அருகே பழுதாகி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-12 09:52 GMT
காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் நாகை அருகே பழுதாகி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் வெளிப்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். இதன் காரணமாக அக்கரைப்பேட்டை மற்றும் கீரைகொல்லைதெரு பகுதிகளில் உள்ள  இரண்டு ரயில்வே கேட்டுகளும் திறக்காததால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்