கன்னியாகுமரி அருகே கடல் சீற்றம் : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கன்னியாகுமரி அருகே கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2019-06-10 07:46 GMT
கன்னியாகுமரி அருகே கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. குளச்சல், தக்கலை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று  சூறை காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் குளச்சல், கோடிமுனை, முட்டம், குறும்பனை சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்