பெருந்துறை அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2019-05-17 18:21 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வீட்டின் அருகே தோப்புபாளையத்தில் வசிக்கும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்