கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமலை நோக்கி செருப்பு வீச்சு : மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

கரூர் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்ட கமலை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-16 18:30 GMT
கமலை நோக்கி செருப்பு வீசிய  2 பேரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் தாக்கினர். இதனையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால் அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே செருப்பு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த கரூர் எஸ்.பி. விக்ரமன்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்