ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.

Update: 2019-04-22 14:02 GMT
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செந்தில்குமார் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் முத்துக்குமார் தான் ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். பின்னர் போலீசார் முத்துக்குமாரை ஆட்சியரிடம் அழைத்து சென்று மனு அளிக்க உதவினர்.தர்ணா போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்