நாக்பூரில் வேலை பார்த்த தமிழக ரிக்சா ஓட்டுநர் மரணம்

நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார்.

Update: 2019-04-20 11:24 GMT
நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறி அவரது உடலை சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை முன் திரண்ட அவரது உறவினர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர்கள் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்