"கொள்கைக்காக பதவி இழக்க தயார்" - தமிமுன் அன்சாரி

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-20 06:17 GMT
நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். கோவை போத்தனூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தற்காக தன் மீது கட்சி தாவல் தடை சட்டம் வந்தால் அதை எதிர்கொள்வேன் என்றும் கூறிய அவர், கொள்கைக்காக பதவி இழக்க தயார் எனவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்