உள்நாட்டு பயணிகளாக 1,170 கிலோ தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் இருவர் கடத்தி வந்த ஒரு கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-17 04:20 GMT
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் இருவர் கடத்தி வந்த ஒரு கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்நாட்டு முனையத்தில் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தது. அவர்களின் பொருட்களை பறிசோதனை செய்ததில் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து சென்னைக்கு உள்நாட்டு பயணிகளாக தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. சுங்க அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்