பொள்ளாச்சி வழக்கு : "சிபிஐ விசாரணை வெற்று அறிவிப்பாக உள்ளது" - ஸ்டாலின் பிரசாரம்

பொள்ளாச்சி விவகாரத்தில், சிபிஐ விசாரணை என்பது வெற்று அறிவிப்பாக இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-04 08:26 GMT
பொள்ளாச்சி விவகாரத்தில், சிபிஐ விசாரணை என்பது வெற்று அறிவிப்பாக இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்ப முயல்வதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த வழக்கை விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசார், சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்