புதிய தலைமை செயலக முறைகேடு புகார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதிய தலைமை செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Update: 2019-03-15 19:54 GMT
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புக் காவல்துறைக்கு மாற்றியது செல்லாது என கூறி இது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்