ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக திருக்காரவாசல் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2019-03-11 02:44 GMT
திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலில் தொடங்கி கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்காரவாசல் கிராம மக்கள் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி முதல் 44 நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  வருகின்ற மக்களவை தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணித்து தொடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக திருக்காரவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்