100 வயதைக் கடந்த மூதாட்டியின் பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100 வயதான மூதாட்டி தனது கொள்ளுப் பேர குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

Update: 2019-01-13 12:12 GMT
கோபி அருகேயுள்ள நன்செய்புளியம்பட்டியில் மறைந்த ராணுவ வீரரின் மனைவியான ராமக்காள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவர் பெற்ற 3 மகன்களுக்கும் 6 பெண்கள், 2 ஆண்கள் என 8 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமக்காள் 100 வயதை கடந்ததை அறிந்த, வெளியூரில் உள்ள அவரது உறவினர்கள், ஒன்றாக கூடி தனியொரு விழாவாக கேக் வெட்டிக் கொண்டாடினர். 100 வயது பாட்டிக்கு கொள்ளுப் பேரக் குழந்தைகள் முத்தமழை பொழிந்தும், கேக் ஊட்டியும் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி பலூன்களை பேரக்குழந்தைகள் பறக்க விட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்