சுகப்பிரசவத்தில் பிறந்த 5.2 கிலோ எடை கொண்ட குழந்தை

சென்னையில் சுகப்பிரசவத்தில் 5 கிலோ 200 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-12 13:20 GMT
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனையில் 39 வயதான ஜெய் ஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது முறையாக பிரசவத்திற்கு வந்த அவருக்கு 5 கிலோ 200 கிராம் எடை கொண்ட அழகிய ஆண் குழந்தை சுகப்பிரசவ முறையில் பிறந்தது. தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ள நிலையில் அதிக எடை கொண்ட குழந்தை சுகப்பிரசவ முறையில், இதுவே முதல் முறை என மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்