500 ஏக்கர் பரப்பளவில் வெங்காய பயிர்கள் சேதம் : அழுகிய பயிர்களுடன் இழப்பீடு வேண்டிய விவசாயிகள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் முன், அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-03 08:03 GMT
திருச்சி மாவட்ட ஆட்சியர் முன், அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துறையூர் அருகே நரசிங்கபுரத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில், மர்மநோய் தாக்கியதால் பயிர்கள் முற்றிலும் அழுகியுள்ளன. இதனால் இழப்பீடு வேண்டி 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய பயிருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்