கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி
கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாவில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கொசு விரட்டி திரவம் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை அறிவியல் கண்காட்சியில் வைத்திருந்தன.