தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Update: 2018-11-19 14:16 GMT
தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய நீர் வளத்துறையின் அறிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் மாநில அரசின் உரிமை என்ற கூறிய நீதிபதிகள்,
உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி , இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தை அணுகி,
தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்