நெல்லையில் பா.ம.க. பிரமுகர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்.. மர்ம நபர்களின் வெறிச்செயல்

Update: 2024-05-02 03:53 GMT

நெல்லை கேடிசி நகர் பகுதியில் வசித்து வரும் பாமக பிரமுகர் செல்லப்பா, கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மேலப்பாட்டம் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்மகும்பல், அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது செல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்