உலகையே நடுங்கவிடும் காசாவின் கோரம்... தன் குடும்பத்திற்காக உயிரை பணயம் வைக்கும் பெண்

Update: 2024-05-02 03:49 GMT

காசாவின் வடக்குப்பகுதியில், போதிய உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவின் வடக்குப்பகுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ள பெண் ஒருவர், தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு உணவு வாங்கி வருவதற்காக தினசரி, தமது உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார். இடிபாடுகளுடன் நிற்கும் கட்டடங்கள், வெடிக்காமல் கிடக்கும் வெடிகுண்டுகள், ஓயாமல் கேட்டும் வெடிச்சத்தம் இவற்றின் இடையே, ஒரு மணிநேரம் நடந்து சென்று, பேக்கரியில் கிடைக்கும் சொற்ப ரொட்டித் துண்டுகளை வாங்கி வந்து, குடும்பத்தின் பசியாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்