தங்கத்தை பசையாக மாற்றி கடத்தல் - ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ஒன்றே கால் கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-15 10:24 GMT
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ரியாஸ் அகமது, ஜாகிர் உசேன் மற்றும் அன்சாரி ஆகியோர் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூன்று பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்