இன்ஸ்டாவில் ரகசிய காதல்.. "பெண் பாலியல் வன்கொடுமை" தனக்கு தானே செய்து கொண்ட பயங்கரம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..

Update: 2024-05-04 03:56 GMT

கணவரை பிரிந்து வாழ்ந்த தன்னை, இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, பிராட்வேயை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் தகாத முறையில் பழகி வந்திருக்கின்றனர். இதில், பெண்ணுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே அவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்திருக்கிறார். இந்நிலையில், தண்டையார்பேட்டையில் உள்ள மணிகண்டனின் அலுவலகத்துக்கு சென்ற அப்பெண், திருமண ஆசை காட்டி தன்னை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக குற்றம்சுமத்திய நிலையில், உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 70 சதவீத தீக்காயத்துடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்