பின்னோக்கி வந்த லாரி வீட்டில் மோதியதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டியில் அரிசி ஏற்றிச் சென்ற லாரி திடீரென பின்னோக்கி வந்து ஒரு வீட்டின் மீது மோதி அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
வீட்டின் முன் அமர்ந்திருந்த 5 பேர் லாரி பின்னோக்கி வருவதை பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த லாரி மோதியதில் வீடு மற்றும் இருசக்கர வாகனம் சேதமடைந்தது.