பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண்

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தையை விட்டு விட்டு தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2018-11-09 03:10 GMT
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தையை விட்டு விட்டு தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவிந்தம்மாள் என்ற வியாபாரியிடம் குழந்தையை கொடுத்து விட்டு சென்ற அப்பெண் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து அந்தப் பெண் குழந்தையை கோவிந்தம்மாள், அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் நலமுடன் இருப்பதாக கூறியதையடுத்து அக்குழந்தை பச்சிளம் குழந்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்