கட்டுப்பாட்டை இழந்த கார் - 2 குழந்தைகள் உட்பட 3 பேருக்கு நடந்த கொடூரம்

Update: 2024-04-29 02:35 GMT

கிருஷ்ணகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அலி என்பவர், கிருஷ்ணகிரியில் இருந்து சொந்த ஊர் நோக்கி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர், தனது மனைவி, இரண்டு வயது மகள் மேகவர்ஷினி மற்றும் 3 மாத ஆண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில், அஞ்சூர் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நரசிம்மன் என்ற முதியவர், கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். பெரியபனகமுட்லு என்ற பகுதியில் வரும் பொழுது நரசிம்மன் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த அலி மற்றும் சக்திவேல் ஆகியோரது பைக்குகள் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அலி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தை மேகவர்ஷினி 3 மாத ஆண் குழந்தை ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்