வீடுகளில் கருப்பு கொடி - தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே முனியாண்டி கோவில் தெரு பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Update: 2018-11-06 10:29 GMT
இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின்சார இணைப்பு வேண்டி பல வருடங்களாக விண்ணப்பித்தும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதால், தீபாவளி பண்டிகையை புறக்கணித்து, கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்