ரன்வீர் ஷா அலுவலகத்தில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி வாகனங்கள் கண்டுபிடிப்பு

சென்னை கிண்டியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-04 12:12 GMT
கடந்த சில நாட்களுக்கு முன் ரன்வீர் ஷா தொடர்புடைய இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் கிண்டியில் உள்ள ரன்வீர் ஷா அலுவலத்தில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது யானை, நந்தி, கருடாழ்வார் உள்ளிட்ட மரத்திலான 5 சுவாமி வாகனங்கள் துணிகளில் போர்த்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவை அனைத்தும் குஜராத்திற்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிலை தடுப்பு பிரிவினர் ரன்வீர் ஷா இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்