கொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்

கொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

Update: 2018-10-16 00:00 GMT
கொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஒன்றுகூடி ஒரு திருடனை மடக்கி பிடித்துள்ளனர். மற்ற திருடர்கள் ஓடிவிட்ட நிலையில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பிடிப்பட்ட திருடனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். தப்பி ஓடிய 2 திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்