மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-09 17:19 GMT
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பவதற்கு, அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் வழங்குவதுடன் மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரமேஷ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை, அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்