தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு முறைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு

தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு முறைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2018-08-27 05:53 GMT
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை 1994ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள் இந்த இட ஒதுக்கீடு நடைமுறை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு இருக்கிறதா என்பது பற்றிய விசாரணை வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்