ஐ.எஸ்.எல். கால்பந்து - முதல் அரையிறுதி லெக் 1 போட்டி.. ஒடிசா - மோகன் பகான் அணிகள் மோதல் - ஒடிசா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

Update: 2024-04-24 08:47 GMT

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் முதல் அரையிறுதி லெக் ஒன் போட்டியில், மோகன் பகான் அணியை ஒடிசா வீழ்த்தியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியின் முடிவில், ஒடிசா இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதி சுற்றில் மோகன் பகானை விட ஒடிசா ஒரு கோல் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதும் லெக் டூ (Leg 2) போட்டி, வரும் 28-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் முடிவில் அதிக கோல் பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்