கோவை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடக்கம் - பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை பேச்சு

Update: 2024-05-05 02:23 GMT

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில், கோவை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர் அடுத்த 30 நாட்கள் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், டி20 உலகக்கோப்பை தொடரில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான் என்றும், விரைவில் அவர் மிகப்பெரிய எழுச்சி பெறுவார் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்