ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : பாகிஸ்தான் அணி அபார வெற்றி

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Update: 2019-06-03 21:32 GMT
டாஸ்வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி,  ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறியது. பாகிஸ்தான் அணி சார்பில், மொகமத் ஹபீஸ், பாபர் அசாம், கேப்டன் சர்பராஸ் அகமத், ஆகியோர் அரைசதம் கடந்தனர். இதனால் அந்த அணி 50 ஓவர்களில், 348 ரன்கள் குவித்த‌து. இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் சதம் விளாசினர். இருந்த போதும் மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 334 ரன்கள் மட்டுமே எடுத்த‌து. இதனால், 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.
Tags:    

மேலும் செய்திகள்