"ஏப்ரல் 19 கவனித்தீர்களா ?" - ப.சிதம்பரத்தின் அதிரடி பதிவு

Update: 2024-04-27 12:34 GMT

ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா என எக்ஸ் தள பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில்பதிவிட்டுள்ள அவர், மோடி அரசு போய்விட்டது என்றும் சில நாட்களாகத்தான் பாஜக அரசு என்றும் குறிப்பிட்டுள்ள அவர், நேற்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்றும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 5-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டதாகவும், ஏப்ரல் 19-ம் தேதி முதல்கட்ட தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தை பெற்றுள்ளதாகவும் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்