துரை தயாநிதியை பார்க்க மருத்துவமனை விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2024-05-09 02:13 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்

துரை தயாநிதியை நேரில் சந்தித்து

நலம் விசாரித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் துரை தயாநிதியை ஏற்கனவே சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்