"படிப்படியாக வழிதவறிச் செல்லும் மோடி" - மோடியின் கோட்டையில் கர்ஜித்த பிரியங்கா காந்தி

Update: 2024-04-27 10:32 GMT

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, போராட்டம் நடத்த விவசாயிகள் டெல்லி வந்த போது, அவர்களின் பிரச்சனைகளை கேட்க கூட அக்கறை காட்டாத பிரதமர் மோடி, தனது பில்லியனர் நண்பர்களைப் பற்றி கவலைப்பட்டு, நாட்டின் சொத்துக்களை அவர்களுக்கு வழங்கி உள்ளதாக குற்றஞ்சாட்டினார். நாட்டின் திமிர்பிடித்த பிரதமர் மோடி என விமர்சித்த பிரியங்கா காந்தி, ஒரு தலைவர் புத்திசாலியாக இல்லாவிட்டாலும் அகங்காரத்துடன் தன்னை மட்டுமே உயர்ந்தவராகக் கருதினால், அவர் படிப்படியாக வழிதவறிச் செல்கிறார் எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்