பரமக்குடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - சசிகலா ஆதரவாளர் நிறுவனத்தின் மீது தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சசிகலா ஆதரவாளர் நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-21 09:16 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சசிகலா ஆதரவாளர் நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
மேலக்காவனூர் கிராமத்தில் உள்ள சசிகலா ஆதரவாளர் வின்சென்ட் ராஜாவின் தார் பிளான்ட் ஆலையில் இந்த தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஆலை முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது பெட்ரோல் குண்டு வீசினார். அது சரியாக பற்றி எரியாததை பார்த்த மர்ம நபர், கார் அருகே சென்று பெட்ரோல் தெளித்து தீ வைத்து சென்றார். சப்தம் கேட்டு ஓடி வந்த வின்சென்ட் ராஜா, சொகுசு கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் போலீஸில் புகார் அளித்தார். அங்கு வந்த குற்றப்பிரிவு டிஎஸ்பி திருமலை, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளை வெளியிட்டு, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சசிகலாவுடன் இவர் பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து, அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வின்சென்ட் ராஜா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்