தமிழகத்தில் பேய் காற்றுடன் அடித்து நொறுக்கிய கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பயங்கரம்

Update: 2024-05-06 09:30 GMT

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை அதிகரித்து வந்த நிலையில், வில்பட்டி, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பாரதி நகர் பகுதியை சேர்ந்த ஒரு வீட்டின் மேற்கூரை தகரங்கள் காற்றில் பறந்தது. மேலும் ரசீதா பேகம் என்பவரது வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. மொத்தமாக 3க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில்,பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் புதிய வீடு கட்டித்தரும்படி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்