"கொரோனா சமூக பரவல் இல்லை" - சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-09 10:06 GMT
நாட்டில் கொரானா பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்து டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன், நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என நிபுணர்கள் தெரிவித்ததாக கூறினார். ஒரு சில பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ள நிலையில், சமூக தொற்றாக மாறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். உலகில் பத்து லட்சம் பேருக்கு ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 538 ஆக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்