"புருஷன அடிச்சி கொன்னுட்டாங்க" - அழுதுகொண்டே வெளியே வந்த மனைவி.. பகீர் பின்னணி

Update: 2024-04-29 07:08 GMT

இருதாளம் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி ஸ்ரீதருக்கும் இவரது மனைவி சுமதிக்கும் 2 பிள்ளைகள் உள்ளனர்... சுமதி இருதாளம் கிராமத்தில் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை பார்த்த எம்.கொத்தூரைச் சேர்ந்த பாலகுமார் என்ற இளைஞருடன் சுமதிக்கு கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஸ்ரீதர், மனைவி சுமதியைக் கண்டித்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமல் சுமதி தொடர்ந்து பால குமாருடனான உறவைத் தொடர்ந்து வந்துள்ளார்... இவ்விவகாரம் தெரிந்து ஸ்ரீதர் குடும்பத்தினரும் சுமதியைக் கண்டித்துள்ளனர். இதனால் கோபத்தில் இருந்துள்ளார் சுமதி. சம்பவத்தன்று 2 பிள்ளைகளும் உறவினர் வீட்டில் இருந்த நிலையில், மீண்டும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு வந்துள்ளது... சண்டை முற்றிய நிலையில், உடனடியாக தனது கள்ளக்காதலன் பாலகுமாரை வீட்டிற்கு வரவழைத்த சுமதி, அவருடன் சேர்ந்து கணவன் ஸ்ரீதரைக் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு சம்பவம் நிகழ்ந்த நிலையில், காலையில் சுமதி அழுது கொண்டே வெளியில் வந்து தனது கணவரை யாரோ அடித்துக் கொலை செய்து விட்டதாக நாடகமாடியுள்ளார். குடும்பத்தினர் போலீசில் புகாரளித்த நிலையில், விசாரணைக்குப் பிறகுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து சுமதியையும் ஓசூரில் பதுங்கி இருந்த கள்ளக்காதலன் பாலகுமாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்