மனைவி த*கொலை.. கல்லூரி மாணவியிடம் மலர்ந்த காதலை பிடித்து கொண்டு ஓட்டம்.. பதறிய பெற்றோர்

Update: 2024-04-29 07:26 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அபிநயஸ்ரீயை காதலித்து கடந்த 24-ஆம் தேதி திருமணம் செய்து பொள்ளாச்சியில் தங்கியுள்ளார். இந்நிலையில், காணாமல் போன மகளைக் கண்டுபிடித்து தருமாறு பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காதல் ஜோடிகளின் செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, காவல் நிலையம் முன்பு குவிந்திருந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்