"காஷ்மீர் விவகாரத்தில் முதலை கண்ணீர் வடிக்கிறது காங்கிரஸ்" - மோடி ஆவேசம்

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-14 12:16 GMT
காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம், பல்லப்கார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, 370வது சட்டப்பிரிவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் மோடி கடும் குற்றச்சாட்டை கூறினார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் தாய்மார்கள் எழுப்பும் கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்களின் பதில் தேவை என்றும் மோடி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்