மணல் கடத்தல் - தி.மு.க நிர்வாகி கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தமல்லியில் சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தி.மு.க ஒன்றிய செயலாளர் இளையபெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2018-10-03 06:19 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தமல்லியில் சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தி.மு.க ஒன்றிய செயலாளர் இளையபெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளையபெருமாள் மற்றும் மணல் லாரி ஓட்டுநர் கண்ணதாசன் ஆகியோர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி, அபராதம் விதித்து ஜாமினில் அவர்களை விடுவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்