டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் பீதி அடைய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்றும் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி டெல்லி காவல்துறை, பாதுகாப்பு படை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கும்படி டெல்லி மாநகர ஆணையர்களுக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.