வீட்டிலிருந்து மாயமான 6 வயது சிறுமி - உண்மையில் நடந்தது என்ன?சென்னைக்கு அருகில் நடந்த திடுக் சம்பவம்

Update: 2024-05-01 08:24 GMT

இதன் பின்னர், குமரியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான தினேஷ் என்பவரை பர்ஷா 2வதாக காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி சிறுமி சுபலட்சுமியுடன் புது கும்மிடிப்பூண்டியில் வசித்து வந்துள்ளனர்... பர்ஷா - தினேஷ் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த சூழலில் சிறுமி சுபலட்சுமி வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியைத் தேடிய நிலையில், அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பேரலில் சடலமாகக் கிடந்துள்ளார்... சிறிய பிளாஸ்டிக் பக்கெட்டில் கயிறு கட்டி பெரிய பேரலில் தண்ணீர் எடுத்து விளையாடிய போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்