பவர்கட்: வாட்டிய வெப்பம்... தவித்த பிரசவித்த பெண்கள், கர்ப்பிணிகள் - மருத்துவமனையில் அவலம்

Update: 2024-05-01 08:23 GMT

கரூர் குளித்தலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுமார் 3 மணி நேரம் நிலவிய மின்வெட்டால், நோயாளிகள் கடும் அவதியுற்றனர். கடும் வெப்பம் காரணமாக, நோயாளிகள், பிரசவித்த பெண்கள், அறையில் இருக்க முடியாமல் மரத்தடியில் தஞ்சம் அடைந்தனர். ஜெனரேட்டர் வசதி இருந்தும் தடையில்லா மின்சாரம் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை சீர் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்