"என் படத்தைப் பார்த்து காப்பி அடித்து எடுக்கப்பட்ட தெலுங்கு படம்" - இயக்குநர் சுந்தர் சி கல...கல...பேட்டி

Update: 2024-05-01 08:59 GMT

சுந்தர் சி இயக்கி இருக்கும் அரண்மனை 4 திரைப்படம் வருகிற 3ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சுந்தர் சி, தெலுங்கு படம் ஒன்றை ரீ மேக் செய்ய எண்ணி தான் தெலுங்கு படங்கள் பார்த்ததாகவும், அதில் தனது 3 படங்களில் இருந்து உரிமம் எதுவும் வாங்காமல் காப்பி அடித்து எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதற்குப் பழி வாங்கும் வகையில் 4 படங்களைக் காப்பி அடித்து உருவாகிய படம் தான் வின்னர் என்று சுந்தர் சி கூறியுள்ளார். மேலும் வின்னர் திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஒரு தெலுங்கு திரைப்படத்தை பார்த்த போது, அந்த திரைப்படத்தில், தான் வின்னர் படத்தில் காப்பியடித்து எடுத்து இருந்த அதே காட்சியை அப்படியே மீண்டும் காப்பி அடித்து எடுத்திருந்ததாக நகைச்சுவையாகத் தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்