ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது - தினகரன்

ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாக தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-09-18 13:37 GMT
ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாக தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு தினகரன் சென்றிருந்தார். அங்குள்ள மக்களுக்கு தையல் இயந்திரம், தள்ளுவண்டி, சலவை பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தினகரன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் காலுன்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஹெச்.ராஜா பேசி வருவதாகவும், உண்மையான இந்துவாக இருந்தால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்