தமிழகத்திற்கு எதிராக நடுரோட்டில் கன்னட பெண்கள் செய்த காரியம்

Update: 2023-09-06 06:41 GMT

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியாவில் பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி, தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, சாலையில் உருண்டு முழக்கங்களை எழுப்பினர். கர்நாடகம் நமதே, யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று பெண்களும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏற்கனவே, காவிரி நீர் கர்நாடகவுக்கே என கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்