பரபரப்பான ரோட்டில் நாற்காலி.. கால்மேல் கால் போட்டு தவ்லத் கட்டிய `கோளாறு' - தட்டி தூக்கிய போலீஸ்

Update: 2024-04-27 14:44 GMT

டெல்லியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை, போலீசார் கைது செய்தனர். சாஸ்திரி பார்க் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் அருகே நாற்காலியில் கால்மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்து வித்தியாசமான முறையில் அந்நபர் ரீல்ஸ் எடுத்துள்ளார். வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், ரீல்ஸ் பதிவிட்ட விபின்குமார் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரது மொபைல், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்