`நாடே உற்று நோக்கும் வழக்கு' - கெஜ்ரிவால் மீது நாளை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Update: 2024-05-10 01:55 GMT

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை நாளை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தன்னை கைது செய்த‌தற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அப்போது, இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை, நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்