தலைநகரில் அமலான வார இறுதி ஊரடங்கு

தலைநகர் டெல்லியில் இன்று முதல் வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

Update: 2022-01-08 06:19 GMT
தலைநகர் டெல்லியில் இன்று முதல் வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 

இன்று காலை முதல் திங்கட்கிழமை (10-1-2022) காலை 5 மணி வரை ஊரடங்கு இருக்கும். அத்தியாவசிய பொருட்கள்  மற்றும் மருந்து கடைகள் இயங்கும்.

மெட்ரோ சேவை இயங்கும் ஆனால் அவசியமாக இருக்கும்பட்சத்தில் மட்டும் பயணம் மேற்கொள்ள வேண்டும். மேலும் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே பாரி கடைகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவசர தேவைக்காக வெளியே பயணம் மேற்கொள்ளும் மக்கள் கட்டாயமாக இ பாஸ் எடுத்திருக்க இருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்